மலேசிய பூப்பந்து சங்கத்தைச் சேர்ந்த பல அதிகாரிகளுக்கும் சோங் வெய் அம்மருந்தைப் பயன்படுத்துவது தெரியும் என அவர் குற்றம்சாட்டி உள்ளார். இதற்காகவே வெளிநாட்டு மருத்துவர் ஒருவரை சோங் வெய் பணிக்கு அமர்த்தி இருந்ததாகவும் சிடேக் பகிரங்கப்படுத்தி உள்ளார்.
“எனினும் உலகின் முதல் நிலை வீரர் என்பதால் அவருக்கு எதிராக வாய் திறக்க தயங்கினர். மேலும் தகுந்த ஆதாரங்கள் இன்றி பேச முடியவில்லை. தற்போது அவரே சிக்கியுள்ளார். அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்த விரும்பவில்லை. ஆனால் இது நீண்ட காலமாக நடந்து வந்துள்ளது,” என்றார் சிடேக்.
ஒருவர் மீது கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளை சுமத்தும் வழக்கம் தமக்கில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், தமக்கு தெரிந்த விவரங்கள் பூப்பந்து சங்கத்தைச் சேர்ந்த மேலும் பலருக்குத் தெரியும் என்றார்.
இதற்கிடையே உலக பூப்பந்து சம்மேளனத்திடம் அறிக்கை அளிக்கும் விஷயத்தில் சோங் வெய்க்கு முழுமையான ஆதரவு அளிக்க இருப்பதாகவும் தேசிய பூப்பந்து ஒற்றையர் பிரிவு பயிற்சியாளரான சிடேக் மேலும் கூறியுள்ளார்.
“முதலிடத்தைப் பிடிக்க குறுக்கு வழிகள் இல்லை என்ற கொள்கையில் சோங் வெய் உறுதியாக இருந்ததை ஒப்புக் கொள்கிறேன்,” என்றார் சிடேக்.