கோலாலம்பூர், டிசம்பர் 20 – முன்னாள் தேசிய மின்வாரியத்துறையின் (Tenaga Nasional Berhad) தலைவர் அனி அரோப் (வயது 83) இன்று அதிகாலை 5.20 மணியளவில் காலமானார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்று நோய்க்கு சிசிக்கை பெற்று வந்த அவர், நோய் முற்றிய நிலையில் இன்று சுபாங் ஜெயாவிலுள்ள சைம் டார்பி ராம்சாய் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.