Home உலகம் ஏர் ஆசியா: இன்று வால் பகுதி மீட்கப்படலாம்

ஏர் ஆசியா: இன்று வால் பகுதி மீட்கப்படலாம்

409
0
SHARE
Ad

Rescue mission of the crashed Air Asia Airplaneஜாகர்த்தா, ஜனவரி 9 – விபத்­துக்­குள்­ளான ஏர் ஆசியா விமா­னத்திலிருந்து உடல்களும், பாகங்களும் தொடர்ந்து மீட்கப்பட்டு வரும் நிலையில், விமானத்தின் வால் பகுதி என நம்­பப்­படும் பகுதி கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக இந்தோ­னே­சிய மீப்புபடை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த வால் பகுதி இன்று இந்தேனேசிய கடற்படையின் முக்குளிப்பு வீரர்களால் மீட்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு மீட்கப்பட்டால், விமானத்தின் கறுப்புப் பெட்டியும் மீட்கப்பட்டு அதன் மூலம் விமான விபத்து குறித்த விவரங்களும் கண்டுபிடிக்கப்படலாம்.

மேலும், ஜாவா கடலில் தேடும் நட­வ­டிக்கை விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்­தனர்.

#TamilSchoolmychoice

Rescue mission of the crashed Air Asia Airplane

162 பயணிகளுடன் ஏர் ஆசியா விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து இதுவரை 43 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.

மோசமான வானிலையும், நடுக்கடலில் கடல் அலைகளின் சீற்றமும் மூட்புப் படையினர் மற்றும் முக்குளிப்பு வீரர்களின் போராட்ட முயற்சிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றன.

Indonesian navy divers on a boat after conducting operations to lift the tail of AirAsia flight QZ8501, in Java Sea, 08 January 2015. Indonesian Navy divers failed to locate the flight recorders from the tail section of the AirAsia plane that crashed into the Java Sea in late December. EPA/ADEK BERRY / POOL
கடலில் அமிழ்ந்திருக்கும் ஏர் ஆசியா விமானத்தின் வால் பகுதியை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் இந்தோனேசிய முக்குளிப்பு வீரர்கள்

படங்கள்:EPA