இந்நிலையில் பிரச்சாரம் நாளையுடன் முடிவடைய உள்ளதால், அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி, மக்களின் உற்சாக வரவேற்பை கண்டு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார்.
டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை நிறைவடைய உள்ள நிலையில் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கிரண்பேடி, அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கி பேசினார்.
எப்போதும் ஊடகங்களில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பேசுபவர் கெஜ்ரிவால் என்றும், ஆனால் செயல் ஒன்றையே நம்புபவர் தாம் என்றும் அவர் கூறினார்.