Home இந்தியா ஏமனிலிருந்து இதுவரை 800-க்கும் அதிகமான இந்தியர்கள் மீட்பு – இந்திய அரசு தகவல்!

ஏமனிலிருந்து இதுவரை 800-க்கும் அதிகமான இந்தியர்கள் மீட்பு – இந்திய அரசு தகவல்!

425
0
SHARE
Ad

Indian nationals arrive after being evacuated from Yemenபுதுடெல்லி, ஏப்ரல் 3 – ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் உச்சமடைந்துள்ள நிலையில், துறைமுக நகரான அல்ஹுதயதா நகரில் சிக்கித் தவித்த 800-க்கும் மேற்பட்ட இந்தியர்களை பத்திரமாக இந்திய  கடற்படை மீட்டுள்ளது என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 3 நாட்களுக்குள் இதுவரை 800-க்கும் அதிகமான இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஏமனில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்துள்ளது. அரசுக்கு எதிராகப் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், போராடி வருகின்றனர்.

இதனையடுத்து அங்கிருக்கும் 4 ஆயிரம் இந்தியர்களை வெளியேற இந்திய அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வெளியுறவு அமைச்சகம் கப்பல்களையும், விமானங்களையும் ஏமனுக்கு அனுப்பியது.

#TamilSchoolmychoice

Indian nationals arrive after being evacuated from Yemenஇந்தியர்களை மீட்க இந்திய கப்பற்படை களத்தில் இறங்கியது. ஏடன் வளைகுடா கடலில் ரோந்துப்பணியில் இருந்த ஐ.என்.எஸ். சுமித்ரா கப்பல் மூலம் முதற்கட்டமாக 350 இந்தியர்களை பத்திரமாக மீட்டு, அருகில் உள்ள ஜிபூட்டி தீவிற்கு கொண்டுவந்தனர்.

அங்கிருந்து, இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரு விமானங்கள் மூலம், கொச்சின், மும்பைக்கு இந்தியர்கள் பத்திரமாக நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்டனர்.  இந்நிலையில், 2-வது கட்டமாக அங்கிருக்கும் 300-க்கும் அதிகமான இந்தியர்களை மீட்க ஐ.என்.எஸ். சுமித்ரா சென்று அவர்களை பத்திரமாக மீட்டுள்ளது.

Indian nationals arrive after being evacuated from Yemenஏமனின் துறைமுக நகரான அல் ஹுதயுதாவில் இருந்து 300-க்கும் அதிகமான இந்தியர்களுடன் சுமித்ரா கப்பல் புறப்பட்டு தலைநகரான சனாவிற்கு வந்துள்ளது. அங்கு அதிகாரிகளின் உத்தரவுகள் கிடைத்தவுடன், விமானங்கள் மூலம் இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இதனிடையே ஜிபூட்டி தீவில் தங்கி, மீட்புபணிகளை மேற்பார்வையிட்டு வரும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது அலி யூசப்பை சந்தித்துப் பேசினார்.

இந்தியா மீட்புப்பணிகளை ஜிபூட்டி தீவிலிருந்து மேற்கொள்ள அனுமதியளித்ததற்கு நன்றி தெரிவித்தார் வி.கே.சிங். வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் மத்திய அரசின்  4-வது மிகப்பெரிய மீட்பு நடவடிக்கையாகும்.

Indian nationals arrive after being evacuated from Yemenஇதற்கு முன்பு, உக்ரைன் போரின் போது, 3 முறை  இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஏமன் நாட்டில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட 190 இந்தியர்கள் விமானம் மூலம் மும்பை சத்ரபதி சிவாஜி அனைத்துலக விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலையில் வந்து சேர்ந்தனர்.

இந்திய விமானப்படை விமானம் ஒன்று இவர்களை மீட்டு மும்பை கொண்டு வந்தது. 190 இந்தியர்களையும் ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் ஐ.ஏ.எப்-சி-17 விமானம் நேற்று அதிகாலை 3.50 மணிக்கு மும்பை வந்து சேர்ந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

yemen700இதற்கிடையே ஏமனில் இருந்து மேலும் 168 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு மற்றொரு விமானம் கொச்சி விமான நிலையத்தை நேற்று அதிகாலை 2 மணிக்கு சென்றடைந்தது.

ஏமன் அதிபர் அபிடிராபோ மன்சூர் ஹாதி மாளிகையை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிவிட்டதாக, அந்நாட்டு பாதுகாப்புபடையினர் தெரிவித்துள்ளனர். 15-க்கும் மேற்பட்ட ஹவுதி கிளர்ச்சியாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் அதிபரின் மாளிகைக்குள் நுழைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

yemen-yemen-மேலும், நேற்று நடைபெற்ற சண்டையில் போது, ஹாதி நகரில் வீசப்பட்ட குண்டுவீச்சில் 18 பொதுமக்கள் உள்ளிட்ட 44 பேர் கொல்லப்பட்டனர் என்று அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அல்கொய்தா தீவிரவாதிகள் ஏடனில் உள்ள சிறைச்சாலையை உடைத்து, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான கைதிகளை விடுவித்தனர் என்றும் பாதுகாப்புபடையினர் தெரிவித்தனர்.