Home உலகம் “நான் தோற்றுவிட்டேன்” – மயூரனின் வழக்கறிஞர் ஒப்புதல்!

“நான் தோற்றுவிட்டேன்” – மயூரனின் வழக்கறிஞர் ஒப்புதல்!

492
0
SHARE
Ad

Mary Jane Velosoஜகார்த்தா, ஏப்ரல் 29 – போதைப்பொருள் கடத்தல் வழக்கில்  இந்தோனேசிய அரசாங்கத்தால் மயூரன் சுகுமாரன், அண்ட்ரு சான் உட்பட 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக, மயூரனின் வழக்கறிஞராக செயல்பட்ட தோடுங் முல்யா லுபிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் தோற்றுவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், பாலி நைன் வழக்கில் ஒரே ஒரு பெண் கைதியான பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேரி ஜேன் வேலோசோவிற்கு கருணை காட்டப்பட்டதும் உறுதியாகி உள்ளது. அதனை பிலிப்பைன்ஸின் வெளியுறவு அமைச்சரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

#TamilSchoolmychoice