Home உலகம் ஆப்கானில் கடும் நிலச்சரிவு – 52 பேர் பலி!

ஆப்கானில் கடும் நிலச்சரிவு – 52 பேர் பலி!

442
0
SHARE
Ad

afghanகாபூல், ஏப்ரல் 29 – வடகிழக்கு ஆப்கானில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 52 பேர் பலியானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆப்கான் – எல்லையில் உள்ள கவான் மாவட்டத்தில் நேற்று காலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதாக மாநில ஆளுநர் அதீப்மும் தெரிவித்தார்.

இப்போது அந்தப் பகுதிக்கு செல்லும் சாலை, பனிச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிக்கு மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டரில்தான் செல்ல முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இப்பகுதியில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கம். கடந்த ஆண்டு மே மாதத்தில் இதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 350 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.