தனது பெயரைக் கூறிக் கொள்ள விரும்பாத சபா மாநிலத்தைச் சேர்ந்த இணைய மேம்பாட்டாளர் ஒருவர், சுற்றுலாப் பயணிகள் நிர்வாணமாக படம் எடுத்துக் கொண்டதும், சிறுநீர் கழித்ததும் தான் மலையில் உள்ள சக்திகளைக் குழப்பிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
என்றாலும், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற ஊடகங்களில், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும், சிலர் குழப்பங்களை விளைவிப்பதற்காகவே நிலநடுக்கத்தைக் காரணம் கூறுவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
ஐரோப்பாவைச் சேர்ந்த 27 பேர் கொண்ட குழு கடந்த மே 10ஆம் தேதி இப்பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது 10 பேர் மட்டும் தனியாகப் பிரிந்து சென்று நிர்வாணமாகப் படம் எடுத்துக் கொண்டு இணையத்தில் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.