Home இந்தியா ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்யும் அரசாணை பிறப்பிப்பு!

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்யும் அரசாணை பிறப்பிப்பு!

476
0
SHARE
Ad

jayalalithaபெங்களூர், ஜூன்5- தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்த அரசாணையைக் கர்நாடக அரசு இன்று பிறப்பித்தது.

கர்நாடக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுதலை செய்து பெங்களூரு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யும்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் மனுவைத் தயாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு  மேல்முறையீட்டு வழக்கிலும் அரசு தரப்பு வழக்கறிஞராகப் பி.வி ஆச்சார்யா நியமிக்கப்படுவார் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.