Home உலகம் விடுதலைப்புலிகள் இயக்கம் இன்னும் தொய்வடையவில்லை : அமெரிக்கா தகவல்!

விடுதலைப்புலிகள் இயக்கம் இன்னும் தொய்வடையவில்லை : அமெரிக்கா தகவல்!

471
0
SHARE
Ad

john-kerryகொழும்பு,ஜூன் 20- விடுதலைப்புலிகளின் சர்வதேச அமைப்புகளும் அதற்கான நிதி ஆதரவும் இன்னும் தொய்வடையவில்லை என்று, உலக நாடுகளின் பயங்கரவாதம் குறித்த அமெரிக்காவின் 2014 ஆம் ஆண்டுக்கான வெளியுறவுத்துறை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கையில் எந்தத் தீவிரவாதத் தாக்குதலும் நடக்கவில்லையென்றாலும், இலங்கை அரசு எடுத்த தீவிர நடவடிக்கையால் 13 விடுதலைப்புலிகள் 2014-ல் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் இந்தியாவில் உள்ள அமெரிக்கா, இஸ்ரேல் தூதரக அதிகாரிகளைக் கொல்லத் திட்டமிட்டவர்கள்.

#TamilSchoolmychoice

மேலும், 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக 16 அமைப்புகள் செயல்படுவதையும், அந்த அமைப்பின் தீவிரவாதத் திட்டங்களுக்காக 422 பேர் நிதி உதவி செய்து இருப்பதையும் கண்டறிந்திருப்பதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

2009-ம் ஆண்டு நடந்த உச்சக்கட்டப் போரில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிப்பட்டு விட்டாலும் கூட, சர்வதேச அளவில் விடுதலைப்புலிகளுக்கு இடையே ஒருங்கிணைந்த தொடர்பு உள்ளதாகவும், அந்த இயக்கத்துக்கு நிதி உதவி அளிப்பது இன்னும் தொடர்ந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.