டோக்கியோவின் தெற்கே உள்ள ஒகாசவாரா தீவுகள் அருகில் கடலுக்கு அடியில் 480 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி உருவாகலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.
ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு, பொருட்சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Comments