Home நாடு கெட்கோ விவகாரம்: ‘டத்தோ’ சகோதரர்கள் கைது!

கெட்கோ விவகாரம்: ‘டத்தோ’ சகோதரர்கள் கைது!

987
0
SHARE
Ad

MACCகோலாலம்பூர் – கெட்கோ நில விவகாரத்தில், பிரபல நிறுவனத்தைச் சேர்ந்த ‘டத்தோ’ சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் தெரிவித்திருக்கிறது.

ஒரே குழுமத்தைச் சேர்ந்த இரு நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகளாக அவ்விருவரும் செயல்பட்டு வந்ததாகவும், இன்று செவ்வாய்க்கிழமை அவர்கள் இருவரும் புத்ராஜெயா குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என்றும் எம்ஏசிசி விசாரணை இயக்குநர் சிமி அப்துல் கானி தெரிவித்திருக்கிறார்.