Home நாடு மாற்றுத் திறனாளிகளுடன் மாமன்ற பொங்கல் விழா 2018!

மாற்றுத் திறனாளிகளுடன் மாமன்ற பொங்கல் விழா 2018!

1163
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசிய இந்துதர்ம மாமன்றமும் மலேசிய டாமாய் மாற்றுத் திறனாளிகள் சங்கமும் இணைந்து எட்டாம் ஆண்டு பொங்கல் விழாவை கொண்டாடவிருக்கின்றனர்.

பாரம்பரிய மரபுப் படி மாற்றுத் திறனாளிகள் பங்குப்பெறும் வகையில் பொங்கல் பொங்குதல், வழிபாடு பிரார்த்தனை செய்தல், உறுமி மேளம் இசைக் கச்சேரி, பண்பாட்டு விளையாட்டுகள் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறவிருக்கின்றன.

Pongalஇப்பொங்கல் விழாவில் வட்டார பொதுமக்கள், நாட்டிலுள்ள பிற சமய மொழி அரசு சார்பற்ற இயக்க பொறுப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், மாற்றுத் திறனாளி சங்க உறுப்பினர்கள், மாமன்ற குடும்ப உறுப்பினர்கள் தவறாமல் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு மாமன்ற தேசியத்தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை A.M.N  இரு இயக்கங்களின் சார்பாக அழைப்பு விடுத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும் தகவல்களுக்கு தொலைப்பேசி 012-2311049 / 012-2016115 எனும் எண்களுடன் தொடர்புக்கொள்ளவும்.

திகதி    : 14 ஜனவரி 2017

நாள்    : ஞாயிற்றுக்கிழமை

நேரம்    : மாலை மணி 3.30

இடம்    : Damai Disabled Persons Association Of Selangor & Wilayah Persekutuan, No.4, Lorong 1A/71J Jalan Carey, 46000, Petaling Jaya, Selangor.