ஆனால், இருவருமே தமிழ்த் திரையுலகில் காலடி வைத்து புகழ் பெறுவதற்கு முன்பே, மேடைக் கச்சேரிகளில் ஒன்றாகப் பாடி தங்களின் நட்பை வளர்த்துக் கொண்டவர்கள் என்பதும் பலருக்கும் தெரியும்.
மேடையிலேயே பகிரங்கமாக ஒருவரை ஒருவர் ‘வாடா, போடா’ எனக் கூப்பிட்டுக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் இருவரும் நெருக்கமானவர்கள்.
அதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையில் நிலவி வந்த மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் நடைபெறவிருக்கும் இசை நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜாவுடன் இணைந்து எஸ்.பி.பாலாவும் பங்கேற்கப் போகிறார் என்ற தகவலால் அவர்களது இரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர்களின் இரசிகர்கள் அவர்கள் மீண்டும் இணைந்ததற்கு பாராட்டியும், வாழ்த்து தெரிவித்தும் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.