ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகத் பிரிட்டனின் பிரதமராகப் பதவியேற்ற லிஸ் டிரஸ் எலிசபெத் ராணியாரைச் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி சந்தித்தார். அதுவே எலிசபெத் இராணியாரின் கடைசி நிகழ்ச்சியாக அமைந்தது.
1952-இல் சர் வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராக இருந்தபோது பிரிட்டனின் அரசியாகப் பதவியில் அமர்ந்தவர் எலிசபெத். அதன் பின்னர் இதுவரை, லிஸ் டிரஸ்ஸையும் சேர்த்து 16 பிரதமர்களோடு பணியாற்றியிருக்கிறார்.
முதன் முதலில் 1955-இல் அந்தோணி ஈடன் என்பவரைப் பிரதமராக ராணியார் நியமித்தார்.
எலிசபெத் இராணியாரின் மறைவுக்கு 10 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.