Home உலகம் லிஸ் டிரஸ், எலிசபெத் ராணியாரைச் சந்தித்தார்- பிரதமராக முதல் உரை நிகழ்த்துவார்

லிஸ் டிரஸ், எலிசபெத் ராணியாரைச் சந்தித்தார்- பிரதமராக முதல் உரை நிகழ்த்துவார்

407
0
SHARE
Ad

இலண்டன் : ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் பிரிட்டனின் அடுத்த பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் லிஸ் டிரஸ் எலிசபெத் ராணியாரைச் சந்தித்து பிரதமருக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றார்.

இன்று செப்டம்பர் 6-ஆம் தேதி பதவியேற்றவுடன் அவர் பிரதமருக்கான அதிகாரபூர்வ இல்லமான எண்: 10 டவுனிங் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து அதிகாரபூர்வ உரையாற்றுவார்.

வழக்கத்திற்கு மாறாக லிஸ் டிரஸ்ஸை எலிசபெத் ராணியார் ஸ்காட்லாந்தில் உள்ள தனது பால்மோரல் அரண்மனையில் சந்தித்தார். வழக்கமாக அவர் பிரிட்டிஷ் பிரதமர்களை இலண்டனிலுள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்து பதவி நியமனக் கடிதங்களை வழங்குவார்.

#TamilSchoolmychoice

1952-இல் சர் வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராக இருந்தபோது பிரிட்டனின் அரசியாகப் பதவியில் அமர்ந்தவர் எலிசபெத். அதன் பின்னர் இதுவரை, லிஸ் டிரஸ்ஸையும் சேர்த்து 16 பிரதமர்களோடு பணியாற்றியிருக்கிறார்.

முதன் முதலில் 1955-இல் அந்தோணி ஈடன் என்பவரைப் பிரதமராக ராணியார் நியமித்தார்.