அதைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக செந்தில் பாலாஜி புழல் சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து நேற்றிரவு அழைத்துச் செல்லப்பட்டார்
எப்போதும் மழுங்க சிரைக்கப்பட்ட (ஷேவ் செய்த) முகத்துடன் காணப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது இளம் தாடியுடன், லேசான நரையுடன் காணப்படும் புகைப்படங்கள் தமிழக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் விசாரணை நடத்தும் அறைக்கு வெளியே மருத்துவர்கள் 2 பேர் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருவர்.
தடுப்புக் காவலில் தன்னை விசாரிக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் உண்ணுவதற்கு செந்தில் பாலாஜி தயிர் சாதம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.