மஇகாவுக்கான கட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை (ஜூன் 22) மஇகா தலைமையகத்தில் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நடைபெற்றது.
தேர்தல் குழுத் தலைவராக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் பணியாற்றினார். மஇகா தேசியத் தலைவராக டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.
சரவணன் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமாவார். இன்றைய வேட்புமனுத்தாக்கலுக்கு முன்பாக அவர் இளம் வயது முதல் வாழ்ந்த கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை வட்டாரத்தில் உள்ள திருமுருகன் ஆலயத்தில் தனது ஆதரவாளர்களோடு சென்று வழிபட்டார்.