Home இந்தியா மெக்கா நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது!

மெக்கா நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது!

640
0
SHARE
Ad

28-1443413572-mina-stampedeமினா – சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவில் கடந்த 24-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நெரிசலில் சிக்கி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் பலியான இந்தியர்களின் விவரம் குறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகமும், ஜெட்டாவில் உள்ள ஹஜ் தூதரகமும் விசாரணை நடத்தி வந்தன.

விபத்து நடந்த அன்று 3 இந்தியர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சனிக்கிழமை நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து 12 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இவர்கள் ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்தது.

இந்நிலையில் இன்று, பலியான இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 35 ஆக உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மெக்கா நெரிசலில் சிக்கி பலியானோரின் மொத்த எண்ணிக்கை  1090 ஆக உயர்ந்துள்ளது.

Comments