இந்நிலையில், சகாயம் குறித்த சமீபத்திய பரபரப்பிற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்துள்ள பேட்டியில், “பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணியின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் சகாயம் ஐஏஎஸ், முதல் வேட்பாளராக வரவேண்டும் என சொல்கிறார்கள். குறிப்பாக அன்புமணியின் வளர்ச்சியை பிடிக்காத திமுகவினர்தான் இதன் பின்னணியில் உள்ளனர்.”
“எனக்கு தெரிந்தவரை சகாயத்திற்கு தற்போது தீவிர அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை. அவர் குடிமைப்பணியில் தொடரவே விரும்புகிறார். ஆனால் சிலர் வேண்டுமென்றே, விஷமனத்தனமான பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். ஊழலற்ற ஆட்சியை அன்புமணியால் மட்டுமே தரமுடியும். மத்திய அமைச்சராக இருக்கும்போதே பல சாதனைகளை செய்தவர் அன்புமணி” என்று அவர் தெரிவித்துள்ளார்.