“இன்று இருக்கும் நமது சட்ட நடைமுறைகளின் காரணமாக அந்தத் தாய் தன்னுடைய இரண்டு குழந்தைகளிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்”
“இது எந்த இனத்திலும் நடக்கலாம்… எந்த மதத்திலும் நடக்கலாம்” என்று சரவணன் இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கமும், நீதித்துறையும், தங்களது கண்களைத் திறந்து இனம், மதம் கடந்து அனைவரையும் பார்க்க வேண்டும், இந்திராவின் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்றும் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.