Home Featured தமிழ் நாடு விஜயகாந்தின் தற்போதய செயல்பாடுகளின் பின்னணியில் சு.சாமியா?

விஜயகாந்தின் தற்போதய செயல்பாடுகளின் பின்னணியில் சு.சாமியா?

790
0
SHARE
Ad

su.swamyசென்னை – 2016 தேர்தலுக்காக அதிமுகவைத் தவிர திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், வலிய வந்து விஜயகாந்தை கூட்டணிக்கு அழைத்துவிட்டன. மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள், பாஜக தலைவர்கள் தான் விஜயகாந்தை கூட்டணிக்கு அழைக்கிறார்கள் என்றால், திமுக தலைவர் கருணாநிதியும் சூசகமாக, நேரடியாக என பல்வேறு வழிகளில் முயற்சித்துப் பார்த்துவிட்டார். ஆனால் விஜயகாந்த் எதற்கும் அசைந்து கொடுப்பது போல் தெரியவில்லை.

இந்நிலையில், விஜயகாந்த் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் இந்த மௌனத்தின் பின்னணியில், சுப்ரமணிய சுவாமி இருப்பதாகவும், அவரின் ஆலோசனையின் பேரில் தான் விஜயகாந்தின் தற்போதய செயல்பாடு இருப்பதாகவும் முன்னணி நாளிதழ் ஒன்று பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அரசியல் பார்வையாளர்களும் நாளிதழின் கருத்தை ஏற்றுக் கொள்கின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜக மூத்த தலைவர் karunanithiசுப்ரமணிய சுவாமியை திடீரென சந்தித்துப் பேசினார். அப்போது இந்த சந்திப்பு, வழக்கமான ‘அரசியல் நாடகமாக’ இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால், தமிழகத்தில் எப்படி கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாகவே இருவரும் ஆலோசனை செய்யதுள்ளதாகத் தற்போது தெரிய வந்துள்ளது.

#TamilSchoolmychoice

தற்போதய நிலையில், அதிமுக-திமுகவிற்கு அடுத்த மூன்றாவது பெரிய கட்சியாக தேமுதிக உள்ளது. தேமுதிகவின் தற்போதய பலம், இருகட்சிகளின் முக்கியப் புள்ளிகளும் ஊழல் வழக்குகளில் சிக்கி இருப்பது தான். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் 8-ம் தேதிக்குப் பின், உச்ச நீதிமன்றத்தில் துவங்க இருக்கிறது. எப்படியும் அதற்கான தீர்ப்பு தேர்தலுக்கு முந்தியே வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

jayaஅதே போல், திமுக முக்கியப் புள்ளிகள் தொடர்புடைய 2ஜி வழக்கு விசாரணையும், விரைவில் முடியும் தருவாயில் இருப்பதால், இந்த வழக்கின் தீர்ப்பும் அக்கட்சியினரைக் கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை இரண்டையும் மனதில் வைத்தே சுவாமி, விஜயகாந்திற்கு ஆலோசனை கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவுடன் தேமுதிக கண்டிப்பாக கூட்டணி இல்லை என உறுதியாகிவிட்ட நிலையில், இழுபறியில் இருக்கும் திமுகவையும் கழற்றிவிட்டு விட்டு, பாஜகவுடன் பேரம் பேசி, கூட்டணி அமைத்து முதல்வராவதற்கு முயற்சியுங்கள் என சுவாமி, விஜயகாந்தை வலியுறுத்தி உள்ளார். அதுவரையில், கூட்டணி குறித்து யாருக்கும் பிடி கொடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.