தேர்வுக் குழுவில் இளையராஜாவின் இளைய சகோதரர் கங்கை அமரன் இருந்ததால், அதன் காரணமாகத்தான் இளையராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார் எனக் கூறப்பட்டது.
இது தொடர்பில் திரைப்பட விருதுகளுக்கான தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த இந்திப் படத் தொகுப்பாளர் (எடிட்டர்) சஞ்சிப் தத்தா டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கு அளித்த பேட்டியில் தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த கங்கை அமரன் அப்படியே இளையராஜாவுக்கு வாக்களித்தாலும் என்ன தப்பு எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“இளையராஜாவின் பின்னணி இசைக் கோர்ப்பு என்பது எப்போதுமே மிகச் சிறப்பாக இருக்கும். இளையராஜா தேர்வு செய்யப்பட அவரது சகோதரரின் வாக்கும், ஆதரவும் தேவையில்லை” என சஞ்சிப் மேலும் கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் இளையராஜா தேர்வு செய்யப்பட்ட பிரிவில் கங்கை அமரன் வாக்களிக்கவில்லை என்றும் சஞ்சிப் தெரிவித்திருக்கின்றார்.
இறுதிக் கட்ட விவாதத்தின்போது கூட, கங்கை அமரன் கூட இருந்தாலும் இளையராஜா தேர்வின் போது வெளியில் இருந்தார் என்றும் சஞ்சிப் மேலும் கூறியிருக்கின்றார்.
தேசிய விருது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், 1000 படங்களைத் தாண்டி பீடுநடை போடும் இளையராஜாவின் தேர்வை – திறமையை யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள் என்பதே உண்மை!