Home Featured நாடு சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: ஒரு பெண்ணின் சடலம் கிடைத்தது!

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: ஒரு பெண்ணின் சடலம் கிடைத்தது!

819
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கூச்சிங் – நேற்று சரவாக்கில் காணாமல் போன ஹெலிகாப்டரைத் தேடும் பணியில், அதன் உடைந்த பாகங்கள் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செபுயாவ் என்ற இடத்தில் பத்தாங் லுப்பார் ஆற்றின் அருகில் இந்த சடலம் நண்பகல் வாக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செபுயாவ் பகுதியில் உள்ள படகுத் துறையில் இருந்து (ஜெட்டி) சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது என பெர்னாமா செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

(மேலும் விவரங்கள் தொடரும்)