Home Featured நாடு சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: 6-வது சடலம் மீட்கப்பட்டது!

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: 6-வது சடலம் மீட்கப்பட்டது!

528
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கூச்சிங் – கடந்த வாரம் வியாழக்கிழமை பாத்தாங் லூப்பாரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், இதுவரை 5 சடலங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த ஹெலிகாப்டரில் இருந்த ஆறாவது நபரான பிலிப்பைன்ஸ் விமானி ரூடோல்ப் ரெக்ஸ் ராகாசைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இன்று காலை 6-வது சடலும் மீட்கப்பட்டுவிட்டதாக பெர்னாமா தகவல் வெளியிட்டுள்ளது. எனினும், அது விமானியின் சடலம் தானா? என்பது ஆய்வுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.