கிழக்கு மற்றும் மேற்கு மலேசியாவிடையே பிரிவினையை ஏற்படுத்தும் அந்த மசோதா தாக்கல் செய்யப்படக் கூடாது என்பதால் தான் அதை திரும்பப் பெற வலியுறுத்துவதாகவும், பிரதமர் துறை அமைச்சருமான குரூப் தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்றத்தில் அது (மசோதா) வலுக்கட்டாயமாக ஏற்றுக்கொள்ளச் செய்யப்பட்டால், சபா, சரவாக் மக்கள் தனியாகப் பிரிந்து செல்லும் உணர்வுக்குத் தள்ளப்படுவார்கள் என நான் அஞ்சுகிறேன்”
“அவர்களுக்கு (மத்திய அரசாங்கம்) இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தும் எண்ணம் கொஞ்சம் கூட இருக்கக் கூடாது” என்று ஸ்டாருக்கு அளித்த தகவலில் குரூப் தெரிவித்துள்ளார்.