இருப்பினும், பல இடங்களில் பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற முடிவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளதால், முடிவுகள் மாறி மாறி வரலாம் என்றும் இறுதி முடிவு மிகக் குறுகிய வித்தியாசத்தைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று வெள்ளிக்கிழமை காலை மலேசிய நேரம் 8.00 மணி வரையிலான முடிவுகள்படி 50.7 சதவீத வாக்காளர்கள் பிரிட்டன் வெளியேற வேண்டும் என்றும், 49.3 சதவீத வாக்காளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்றும் வாக்களித்துள்ளனர்