Home Featured தமிழ் நாடு சென்னை அருகே கடலுக்கடியில் மர்மப் பொருள்: மாயமான ஏஎன்32 விமானத்தின் பாகமா?

சென்னை அருகே கடலுக்கடியில் மர்மப் பொருள்: மாயமான ஏஎன்32 விமானத்தின் பாகமா?

625
0
SHARE
Ad

AN-32சென்னை – சென்னையில் இருந்து 161 கடல்மைல் தொலைவில்,  கடலுக்கு அடியில் ஏறக்குறைய 3.5 கி.மீ. ஆழத்தில், சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அப்பொருள் மாயமான ஏஎன் 32 ரக விமானத்தின் பாகமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து வருகின்றனர்.

எனினும், மோசமான வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக அப்பொருளை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice