Home Featured தமிழ் நாடு குஷ்பு – நக்மா இடையில் பனிப்போரா? – திருநாவுக்கரசர் விளக்கம்!

குஷ்பு – நக்மா இடையில் பனிப்போரா? – திருநாவுக்கரசர் விளக்கம்!

938
0
SHARE
Ad

kushboo-nagma445-04-1478251480சென்னை – காங்கிரஸ் நிர்வாகிகளான குஷ்புவுக்கும், நக்மாவுக்கும் இடையில் பனிப்போர் நிலவி வருவதாகவும், அவர்களுக்குள் மோதல் இருப்பதாகவும் ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்துள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் டெல்லியில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட குஷ்புவும், நக்மாவும் அருகருகே அமர வைக்கப்பட்டும் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை.

இந்நிலையில், இத்தகவல் ஊடகங்களில் பரவி வந்த நிலையில், அது குறித்து விளக்கமளித்துள்ள திருநாவுக்கரசர், குஷ்புவிற்கும், நக்மாவிற்கும் எந்த ஒரு கருத்து மோதலும் இல்லை என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்த விவகாரத்தில் ஊடகங்கள் தவறான செய்தியைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.