கோலாலம்பூர் இஸ்தானா நெகாராவில் சிங்காசனா கெச்சில் என்ற அறையில், பேரரசர் சுல்தான் முகமட் வி முன்னிலையில், தனக்கான நியமனப் பத்திரத்தை ராவுஸ் பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பிரதமர் துறை அமைச்சர் அசலினா ஒத்மான் சைட், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் சுல்கிப்ளி அகமட் மாகினுடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வந்த ஆரிப்பின் சகாரியா தனது 66-வது வயதில் ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்குப் பதிலாக கடந்த ஏப்ரல் 1-ம் தேதி, முகமது ராவுஸ் நாட்டின் 14-வது தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.