இத்தாக்குதல் முறியடிப்புச் சம்பவத்தின் போது, ஏவுகணைகளின் எரிந்த பாகங்கள் நகர்புறங்களில் விழுந்ததில், எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் பலியானார்.
“இந்த ஆக்ரோஷமான நடவடிக்கைகள், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் தீர்மானம் 2216 மற்றும் 2231-ஐ அப்பட்டமாக மீறியிருக்கின்றன. இந்த தொடர் விரோத நடவடிக்கைகள் சவூதி அரேபியா இராஜ்ஜியத்திற்கு நேரடி அச்சுறுத்தலாகவும், வட்டார மற்றும் அனைத்துலகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளன” என சவுதி அரசிய தகவல் தொடர்பு அமைச்சு தமது அறிக்கையில் கூறியிருக்கிறது.