Home நாடு தேர்தல் 14: பத்து நாடாளுமன்றத் தொகுதியில் கெராக்கான் லாவ் மீண்டும் போட்டி!

தேர்தல் 14: பத்து நாடாளுமன்றத் தொகுதியில் கெராக்கான் லாவ் மீண்டும் போட்டி!

896
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில், பத்து நாடாளுமன்ற தொகுதியில், கெராக்கான் கட்சியின் உதவித் தலைவர் டாமினிக் லாவ் ஹோய் சாய் மீண்டும் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் மா சியூ கியாங் இன்று வியாழக்கிழமை அறிவித்தார்.

லாவின் பெயர் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாகவும் மா சியூ கியாங் இன்று பத்து சேவை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த 13-வது பொதுத்தேர்தலில், பத்து நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் வேட்பாளர் தியான் சுவாவை எதிர்த்துப் போட்டியிட்ட லாவ் 28,388 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

#TamilSchoolmychoice

எனினும், இந்தத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் நிறுத்தப்படுகின்றார். பிகேஆர் இன்னும் வேட்பாளர்கள் பெயரை அறிவிக்காத நிலையில், தியான் சுவா மீண்டும் பத்து தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

13-வது பொதுத்தேர்தலில், 41,672 வாக்குகள் பெற்று, 13,284 வாக்குகள் பெரும்பான்மையில் தியான் சுவா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.