Home தேர்தல்-14 அஸ்மின் அலி அன்வாரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்

அஸ்மின் அலி அன்வாரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்

835
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மே 9 பொதுத் தேர்தலில் மிகப் பெரிய பெரும்பான்மையோடு சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து மாநில மந்திரி பெசார் அஸ்மின் அலி செராஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அன்வாருடன் இருக்கும் படத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் அஸ்மின் அலி வெளியிட்டுள்ளார்.

அன்வார் கூடிய விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்றும், அவருக்கு முழு மன்னிப்பு வழங்க மாமன்னர் இணங்கியுள்ளார் என்றும் இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் துன் மகாதீர் அறிவித்தார்.