Home நாடு “சாகிர் நாயக் பிரச்சனை ஏற்படுத்தாவிட்டால் நாடு கடத்த மாட்டோம்” – மகாதீர்

“சாகிர் நாயக் பிரச்சனை ஏற்படுத்தாவிட்டால் நாடு கடத்த மாட்டோம்” – மகாதீர்

1016
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் பிரச்சனை ஏதும் ஏற்படுத்தாமல் இருந்தால் அவரை மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த மாட்டோம் என பிரதமர் துன் மகாதீர் அறிவித்திருக்கிறார்.

மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக மலேசிய அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.

இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் இந்திய தொலைக்காட்சி அலைவரிசையான ரிபப்ளிக் டிவிக்கு வழங்கிய பேட்டியில் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

தங்களின் விண்ணப்பம் மலேசிய அரசாங்கத்தின் வசம் தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும், கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் சம்பந்தப்பட்ட மலேசிய அரசாங்க இலாகாக்களுடன் இதுகுறித்து தொடர்பில் இருப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்திருக்கிறார்.

எனினும், நேற்று வியாழக்கிழமை பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மலேசியக் காவல் துறைத் தலைவர் புசி ஹருண் காவல் துறையைப் பொறுத்தவரை இதுவரையில் சாகிர் நாயக்கை நாடு கடத்தும் விண்ணப்பம் எதனையும் தாங்கள் இதுவரை பெறவில்லை எனத் தெரிவித்தார்.