Home நாடு ரிசா அசிஸ் மீது 4-வது நாளாக தொடர் விசாரணை

ரிசா அசிஸ் மீது 4-வது நாளாக தொடர் விசாரணை

1440
0
SHARE
Ad
ரிசா அசிஸ்

புத்ரா ஜெயா – இன்று வெள்ளிக்கிழமை காலை 9.50 மணியளவில் மீண்டும் புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையம் வந்தடைந்த ரிசா அசிஸ் தொடர்ந்து 4-வது நாளாகத் தொடர்ச்சியாகத் தனது வாக்குமூலத்தை வழங்கி வருகிறார்.

48 வயதான ரிசா அசிஸ் செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) முதல் புத்ரா ஜெயாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு தினமும் வருகை தந்து பல மணி நேரங்கள் தனது வாக்குமூலத்தை வழங்கி வருகிறார்.

ரிசா அசிஸ் நஜிப் துணைவியார் ரோஸ்மா மன்சோரின் முதல் கணவர் மகன் ஆவார்.

#TamilSchoolmychoice

ரிசா ஹாலிவுட் படத் தயாரிப்பாளரும் ஆவார். இவர் ரெட் கிரானைட் பிக்சர்ஸ் (Red Granite Pictures) என்ற ஆங்கில படத் தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.

இந்த நிறுவனம்தான் ‘தெ வோல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட்’ என்ற புகழ்பெற்ற ஆங்கிலப் படத்தை, லியார்னாடோ டி காப்பிரோவைக் கதாநாயகனாகக் கொண்டு தயாரித்தது.

1எம்டிபியில் இருந்து பெறப்பட்ட பணத்தைக் கொண்டுதான் ரெட் கிரானைட் நிறுவனம் ஆங்கிலப் படத் தயாரிப்பில் முதலீடு செய்தது என்பதுதான் ரிசா அசிஸ் மீதான விசாரணைக்கான அடிப்படையாகும்.