Home நாடு வேதமூர்த்தி, குலசேகரன் சீ பீல்ட் ஆலயத்திற்கு வருகை

வேதமூர்த்தி, குலசேகரன் சீ பீல்ட் ஆலயத்திற்கு வருகை

955
0
SHARE
Ad

சுபாங் – பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி நாட்டின் முதன்மைத் தலைப்புச் செய்தியாக மாறியிருக்கும் சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலயத்திற்கு இன்று பிற்பகலில் பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் பொன்.வேதமூர்த்தியும், மனித வள அமைச்சர் எம்.குலசேகரனும் இணைந்து வருகை தந்து நிலைமையை நேரில் கண்டறிந்தனர்.

அவர்களுடன் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவும் வருகை தந்தார்.

பிரதமர் துறையின் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ பஹாரின் இட்ரிசும் இந்த வருகையின் போது உடனிருந்தார்.