Home நாடு தாஜூடின் மற்றும் இப்ராகிம் அலி மீது சட்ட நடவடிக்கை- வேதமூர்த்தி

தாஜூடின் மற்றும் இப்ராகிம் அலி மீது சட்ட நடவடிக்கை- வேதமூர்த்தி

988
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் மற்றும் பெர்காசா அமைப்பின் தலைவர் இப்ராகிம் அலி, தம் மீது விடுத்த அறிக்கைகளை 24 மணி நேரத்திற்குள் மீட்டுக் கொள்ளவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தி கூறினார். 

இவ்விருவரும் தாம் மலாய் மற்றும் இஸ்லாம் சமூகத்தினை தவறாகப் பேசியுள்ளதாக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாகத் தெரிவித்தார். 

மேலும் கூறிய அவர் பல்வேறு இனம், மதம் , கலாச்சாரம் என மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நாட்டில் தாஜுடின் மற்றும் இப்ராகிம் போன்றோரின் சாடல் சரியானதல்ல என்றார்.