மேலும், கூறிய அவர், “செமினி இடைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதற்கான சாத்தியங்கள் உண்டு. ஆயினும், இது குறித்து மத்திய செயற்குழுவுடன் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது” என்றார்.
இந்த இடைத் தேர்தலில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை பேசுவதற்கான களமாக பார்ப்பதாகவும், இதுவரையிலும் அத்தொகுதியில் உள்ள மக்கள் இன்னும் தங்களைச் சந்தித்து அறிவுரைகளையும், உதவிகளையும் பெற்றுச் செல்வதாகவும் அவர் கூறினார்.
அவர் வேட்பாளராக நியமிக்கப்படுவாரா என்று கேட்டதற்கு, “வேறு யாராவது கூட தேர்தலில் போட்டியிடலாம்” எனக் கூறினார்.