Home நாடு மஇகா- மசீச: “அவசரப்பட வேண்டாம், தேமு கூட்டத்தில் பேசி தீர்க்கலாம்!”- முகமட் ஹசான்

மஇகா- மசீச: “அவசரப்பட வேண்டாம், தேமு கூட்டத்தில் பேசி தீர்க்கலாம்!”- முகமட் ஹசான்

715
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மஇகா மற்றும் மசீச கட்சிகள் வேறொரு கூட்டணியை அணுக இருப்பதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டதற்கு, பொறுத்திருந்து செயல்படுமாறு அம்னோ கட்சியின் இடைக்காலத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சம்பந்தமாக தேசிய முன்னணியின் உச்சமட்டக் குழு கூட்டத்தில் பேசப்படும் எனவும் அவர் கூறினார்.

அவ்விரு பங்காளிக் கட்சிகளின் அதிருப்தியை தாம் புரிந்து கொண்டதாகக் கூறிய ஹசான், அவர்களின் கருத்துகளை அப்படியே விட்டுவிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து சிறந்த ஒரு தீர்வினை எடுப்பதில் தேசிய முன்னணி கவனத்தை செலுத்தும் என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த பிரச்சனையை எந்தவொரு பொறுப்பற்ற தரப்பும் அரசியலாக்கக் கூடாது. அதற்கு மாறாக, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து சிறந்த ஒரு முடிவினை எடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அஜிஸ் வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல் அவ்விரு கட்சிகளையும் வெளியேறச் சொல்லி பதிலடிக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.