இதன் மூலம், நாளை புதன்கிழமை நடைபெற இருக்கும், பிரிட்டனின் நாடாளுமன்ற கூட்டத்தில் பிரெக்சிட் தொடர்பாக உள்ள சாத்தியக் கூறுகள் குறித்து அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே விவாதித்து இறுதி முடிவுக் கூறுவார்கள் எனக் கூறப்படுகிறது.
ஆயினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வது தொடர்பாக எவ்வித உத்தரவாதத்தையும் அளிக்க இயலாது என பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.
பிரெக்சிட் விவகாரத்தில் அரசாங்கம் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.