ஐபிசிஎம்சி தேவையற்றது என சொல்லும் வகையில் ஜேபிஐஎஸ் செயல்படும்!- ஐஜிபி

    547
    0
    SHARE
    Ad

    கோலாலம்பூர்:  காவல் துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையம் (ஐபிசிஎம்சிநிறுவப்படுவது பொருத்தமற்றதாகக் கருதப்படும் வரை காவல் துறை நேர்மை மற்றும் இணக்கத் துறைக்கு (ஜேபிஐஎஸ்) அதிகாரம் அளிக்க உள்ளதாக காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் உறுதிமொழி அளித்தார்.

    இந்த துறைக்கு அதிகாரம் அளிக்க நம்பகமான அதிகாரிகளை நியமனம் செய்வதன் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    கடந்த மே 13-ஆம் தேதி இவ்வருட இறுதிக்குள் ஐபிசிஎம்சி அமைக்கப்படும் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெரிவித்திருந்தார். முன்னதாககாவல் துறையினரை தண்டிக்கும் எண்ணத்தில் இந்த ஆணையம் அமைக்கப்படும் எனும் தவறான கண்ணோட்டம் காவல் அதிகாரிகள் மத்தியில் இருந்து வந்த நிலையில் இந்த ஆணையத்தை அமைப்பதற்கு காவல் அதிகாரிகள் மத்தியிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

    #TamilSchoolmychoice

    இந்த விவகாரம் குறித்து ஆட்சி முறைநேர்மை மற்றும் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு நல்லமுறையில் காவல் அதிகாரிகளுக்கு இதன் நோக்கத்தையும்செயல்பாட்டையும் எடுத்துரைத்ததற்குப் பின்பு காவல் துறை அதிகாரிகள் இந்த ஆணையத்தை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.