Home One Line P1 எம்ஏசிசி: பாதிக்கும் மேற்பட்டோர் 1எம்டிபி தொகையைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் கோரியுள்ளனர்!

எம்ஏசிசி: பாதிக்கும் மேற்பட்டோர் 1எம்டிபி தொகையைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் கோரியுள்ளனர்!

564
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபியிலிருந்து நிதி பெற்றதாக நம்பப்படும் 80 நபர்கள் மற்றும் நிறுவனங்களில் பாதி பேர் அக்டோபர் 7-ஆம் தேதி விடுக்கப்பட்ட எச்சரிக்கைக் கடிதங்களைப் பெற்ற பிறகு தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் லத்தீபா கோயா தெரிவித்தார்.

அந்த 80 பெயர்களில், கால அவகாசம் கேட்டு பாதி பேரிடமிருந்து கருத்துக்களைப் பெற்றோம். சிலர் பணத்தை செலுத்த விரும்பினாலும், நாங்கள் குறிப்பிட்டுள்ள தொகையை திருப்பிச் செலுத்த அவர்களால் இயலவில்லை. சிலர் பணம் செலுத்துவதற்கான வழித்தடமாக பயன்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் இறுதி நன்மைகளைப் பெறவில்லை என்று கூறுகிறார்கள்.”

ஆகவே, இறுதியில் யார் எங்களுக்கு ஒத்துழைப்பைக் கொடுக்கத் தயாராக இருந்தால், நாங்கள் அப்பணத்தைப் பெற்றவர்களை அணுகுவோம்”  என்று லத்தீபா நேற்றிரவு வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவில் கூறினார்.

#TamilSchoolmychoice

எம்ஏசிசி கோரிக்கை விடுத்துள்ள தொகையை விசாரிக்க வேண்டும் என்று ஒரு சிலர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர் என்று அவர் கூறினார்.

நாங்கள் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளோம். விசாரிக்க எங்களுக்கு சிறிது நேரம் கொடுங்கள்என்று அவர் கூறினார்.

நிறுவனங்கள், தனிநபர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 80 எச்சரிக்கைக் கடிதங்கள் மூலம் எம்ஏசிசி 420 மில்லியன் ரிங்கிட்டை கோரியுள்ளது.