Home One Line P1 தஞ்சோங் பியாய்: மாலை 5.30 மணிக்கு அனைத்து வாக்கு மையங்களும் மூடப்பட்டன!

தஞ்சோங் பியாய்: மாலை 5.30 மணிக்கு அனைத்து வாக்கு மையங்களும் மூடப்பட்டன!

639
0
SHARE
Ad

தஞ்சோங் பியாய்: தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்கள் தங்களது புதிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் இன்று சனிக்கிழமை மொத்தம் 27 வாக்குச் சாவடிகள் காலை 8 மணி முதல் திறக்கப்பட்டது.

மாலை 5.30 மணியளவில் அனைத்து வாக்கு மையங்களும் மூடப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து வாக்குகள் எண்ணப்பட்டு கணக்கிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாலை 4 மணி நிலவரப்படி 70 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த செப்டம்பர் மாதம் நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் முகமட் பாரிட் முகமட் ராபிக் காலமானதைத் தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த இடைத்தேர்தலில் ஆறு முனைப் போட்டி நிலவியது. நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து கர்மெய்ன் சர்டினி களம் இறங்கினார்.

மேலும், தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து டத்தோஶ்ரீ டாக்டர் வீ ஜெக் செங், வெண்டி சுப்பிரமணியம் (கெராக்கான்), டத்தோ டாக்டர் பாட்ருலஷாம் அப்துல் அசிஸ் (பெர்ஜாசா) மற்றும் இரு சுயேச்சை வேட்பாளர்களான டாக்டர் அங் சுவான் லாக் மற்றும் பாரிடா ஆரியணி அப்துல் காபார் போட்டியில் இறங்கினர்.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடக்கும் ஒன்பதாவது இடைத்தேர்தலாக இது கருதப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ முடிவு இன்று இரவு 10 மணிக்கு அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.