இந்த நூல் கடந்த செப்டம்பரில் தமிழ் நாட்டின் சென்னையில் வெளியிடப்பட்டபோது அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாகவும், பயனான இந்த நூலை மலேசிய இந்தியர்களும் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நூலை வெளியிட்டு, அனைவருக்கும் இலவசமாகவே வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்ததாகவும் சரவணன் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவர் விஜயராணி செல்லப்பா வரவேற்புரையாற்றினார்.





