Home One Line P1 அம்பிகா, மரினா மகாதீர் உட்பட 18 பேர் காவல் நிலையத்தில் வாக்குமூலம்!

அம்பிகா, மரினா மகாதீர் உட்பட 18 பேர் காவல் நிலையத்தில் வாக்குமூலம்!

559
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சமீபத்திய அரசாங்க மாற்றத்தைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அம்பிகா சீனிவாசன் மற்றும் முன்னாள் பிரதமரின் மகள் மரினா மகாதீர் உட்பட 18 ஆர்வலர்கள் காவல் துறையினரால் நேற்று புதன்கிழமை விசாரிக்கப்பட்டனர்.

அமானா முன்னாள் இளைஞர் பகுதி துணைத் தலைவர் முகமட் பாயிஸ் பாட்ஸில் மற்றும் இளைஞர் பகுதி உதவித் தலைவர் அப்பாஸ் அஸ்மி ஆகியோரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

அவர்களின் வாக்குமூலங்கள் கோலாலம்பூரில் உள்ள டாங் வாங்கி காவல் துறை தலைமையகத்தில் மதியம் 12 மற்றும் பிற்பகல் 3 மணிக்கு இரண்டு தனித்தனி அமர்வுகளில் பதிவு செய்யப்பட்டன.

#TamilSchoolmychoice

மூன்று செயல்களின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் ஆர்வலர் பாடியா நட்வா பிக்ரி தவிர, அவர்கள் அனைவரும் முன் அறிவிப்பை வழங்கத் தவறியதற்காக அமைதி பொதுக்கூட்டம் சட்டம் 2012-இன் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள்.

தேசத்துரோக சட்டம் 1948 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 ஆகியவற்றின் கீழ் பாடியா விசாரிக்கப்படுகிறார்.

விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மரினா, அறிவிப்பு விதிகள் இந்த விவகாரத்தில் நியாயமற்றவை, ஏனெனில் என்ன நடந்தது என்பது எதிர்பார்க்காதது.

“முதல் 10 நாட்கள் என்னவாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால், நாங்கள் அறிவிப்பை அனுப்பியிருக்கலாம்.”

“பின்னர் இங்குள்ள அனைவரையும், எங்களுடன் இருப்பவர்களையும் அழைக்கலாம்,” என்று அவர் கூறினார்.

இந்த விசாரணை புதிய அரசாங்கத்திற்கு ஒரு நல்ல தொடக்கமல்ல என்றும் அம்பிகா கூறினார்.

“என்ன நடந்தது என்பதற்கு மக்கள் அமைதியாக இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்காதீர்கள்” என்று முன்னாள் வழக்கறிஞர்கள் மன்றத் தலைவரான அவர் கூறினார்.