Home நாடு வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 20ஆம் தேதி- வாக்களிக்கும் நாள் மே 5ஆம் தேதி

வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 20ஆம் தேதி- வாக்களிக்கும் நாள் மே 5ஆம் தேதி

517
0
SHARE
Ad

ecகோலாலம்பூர், ஏப்ரல் 10- இன்று காலை 9.30 மணியளவில் தனது சந்திப்பு கூட்டத்தை நடத்திய தேர்தல் ஆணையம் 13ஆவது பொதுத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி 13ஆவது பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 20 ஆம் தேதியும், பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் நாள் மே 5 ஆம் தேதி என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.