அந்த வகையில் நாளை வெள்ளிக்கிழமை (மே 15) பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.00 மணிவரை பேராக் மாநில தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் WEBINAR / இயங்கலைப் பயில்களம் #6 : நிகழ்ச்சியில் மலேசியாவின் பிரபல கணினி நிபுணர் முத்து நெடுமாறன் கலந்துகொள்கிறார்.
முரசு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தோற்றுநரும், தலைமைச் செயல்முறை அதிகாரியுமான முத்து நெடுமாறன் செல்லினம் குறுஞ்செயலியைத் தோற்றுவித்தவருமாவார். முரசு அஞ்சல் தமிழ் எழுத்துருவின் உருவாக்குநருமான முத்து நெடுமாறன் செல்லியல் இணைய ஊடகத்தின் தோற்றுநரும் ஆவார்.
பேராக் மாநிலத் தலைமையாசிரியர் கழக ஆதரவுடன், பேராக் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான உதவி இயக்குநர் சுப.சற்குணன் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியை யூடியூப் தளத்தில் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம் :
https://tiny.cc/webinarstpk
இந்த நிகழ்ச்சியை முகநூல் வழி கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: