Home One Line P1 சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!- புக்கிட் அமான்

சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!- புக்கிட் அமான்

520
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெரும்பாலான மாநிலங்களில் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புக்கிட் அமான் விசாரணை மற்றும் போக்குவரத்து அமலாக்க இயக்குநர் டத்தோ அசிஸ்மான் அலியாஸ் தெரிவித்தார்.

இருப்பினும், இன்றுவரை, நெடுஞ்சாலைகளில் நெரிசல் குறித்து எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.

“பல்வேறு மாநிலங்களிலிருந்து, காவல்துறையினர் சரியான நேரத்தில் அறிக்கைகளைப் பெற்றுள்ளனர், ஆனால் இது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை மட்டுமே உள்ளடக்கியது” என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், கோம்பாக்கிலிருந்து பெந்தோங் வரையிலான கேஎல்-காராக் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் குறித்து கேட்டபோது, ​​காவல் துறையினர் சாலைத் தடுப்பு விதித்ததைத் தொடர்ந்து இது நடந்ததாக அசிஸ்மான் கூறினார்.

நிபந்தனைக் கட்டுப்பாட்டு ஆணைக்கு மக்கள் கீழ்ப்படிவதையும், மாநிலம் முழுவதும் பயணம் செய்யாமல் இருப்பதையும் உறுதி செய்வதே இந்த சாலைத் தடுப்பு என்று அவர் கூறினார்.