Home One Line P1 பினாங்கு பிகேஆர் இளைஞர் தலைவர் கார் மீது தாக்குதல்

பினாங்கு பிகேஆர் இளைஞர் தலைவர் கார் மீது தாக்குதல்

416
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: பினாங்கு பிகேஆர் இளைஞர் தலைவர் பாஹ்மி சைனோல் இன்று காலை தனது கார் கண்ணாடி உடைந்ததைத் தொடர்ந்து காவல் துறையில் புகார் ஒன்றை பதிவு செய்தார்.

செபெராங் ஜெயாவில் உள்ள தனது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக பாஹ்மி கவலை தெரிவித்தார். இது அரசியல் நோக்கம் கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

“இந்த நடவடிக்கை எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது அரசியல் நோக்கம் கொண்டது என்று நான் நம்புகிறேன்.” என்று மலேசியாகினியைத் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த தாக்குதல் பல ஊடகங்களில் அவர் வெளியிட்ட சில கடுமையான அறிக்கைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.

“நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை.” என்று அவர் கூறினார்.

இன்று காலை 9 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியபோது தனது காரின் முன் கண்ணாடி உடைந்திருப்பதைக் கவனித்ததாக பாஹ்மி கூறினார்.

காரின் அருகே செங்கற்களைக் கண்டதால் குற்றவாளி செங்கல் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது என்று அவர் சந்தேகித்தார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 427-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறி, பாஹ்மியின் அறிக்கையை காவல்துறையினர் பெற்றுள்ளதாக செபெராங் ஜெயா மத்திய மாவட்ட காவல் துறைத் தலைவர் ஷாபி அப்துத் சமாட் உறுதிப்படுத்தினார்.