Home One Line P1 தேர்தல் ஆணையத் தலைவர் சபாநாயகர்- இங்கா உறுதிப்படுத்தினார்!

தேர்தல் ஆணையத் தலைவர் சபாநாயகர்- இங்கா உறுதிப்படுத்தினார்!

413
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசானை, மக்களவை சபாநாயகராக முன்மொழிந்து பிரதமர் மொகிதின் யாசின் பரிந்துரை கடிதம் அனுப்பியதை மக்களவை துணை சபாநாயகர் இங்கா கோர் மிங் உறுதிப்படுத்தினார்.

தேசிய முன்னணியின் பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர் அசாலினா ஓத்மான் சைட் துணை சபாநாயகராக பரிந்துரைக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சீன நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இதை வெளிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

டான்ஸ்ரீ மொகிதின் யாசினின் தலைமைக்கு எதிராக லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் துன் மகாதீர் முகமட் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், தேசியக் கூட்டணியின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவையில் இருக்க வேண்டும் என்பதால், இந்த பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாதவரின் தேர்வு நடைபெறலாம் என்று முன்னதாகக் கூறப்பட்டது.

“மொகிதினுக்கு மக்களவையில் இருக்கும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் தேவை. எனவே சபாநாயகர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாதவராக இருக்க வேண்டும்.” என்று அண்மையில் வட்டாரம் தெரிவித்திருந்தது.

முன்னாள் மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ பாண்டிகர் அமீன் முலியா மற்றும் மற்றொரு முன்னாள் நீதிபதி ஆகியோரும் இந்த பதவிக்குப் பரிசீலிக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்ட நிலையில், இங்கா இந்த விவகாரத்தை வெளிப்படுத்தினார்.

இதற்கிடையில், ஜூலை 13-ஆம் தேதி நாடாளுமன்றம் தொடங்கியதும், தற்போதைய தேசிய கூட்டணி நிர்வாகம் சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப் மற்றும் நம்பிக்கைக் கூட்டணி நிர்வாகத்தின் கீழ் நியமிக்கப்பட்ட துணை சபாநாயகர் இங்கா கோர் மிங் ஆகியோரை நீக்குவதற்கான முயற்சிகளைக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அவர்களை அகற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள இரண்டு தீர்மானங்களும் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) மாலை பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்டன.

கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், சபாநாயகரும், துணை சபாநாயகரும் எந்த நேரத்திலும் ஒரு பொதுத் தேர்தலுக்குப் பிறகு அவை முதன்முதலில் கூடும் போது, ​​அவர்கள் பதவியில் இருந்து எழுத்துப்பூர்வமாக விலகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நடப்பு நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமட் அரிப் முகமட் யூசோப், அவையின் துணைத் தலைவர் இங்கா கோர் மிங் ஆகிய இருவரையும் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கும் தீர்மானத்தை மொகிதின் சமர்ப்பித்திருக்கிறார் என வெளியாகியிருக்கும் செய்தியை முகமட் அரிப் உறுதிப்படுத்தியிருந்தார்.

“இதில் எனக்குத் தனிப்பட்ட பிரச்சனை எதுவுமில்லை. நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டியது மக்களவையின் பொறுப்பாகும். ஜனநாயக மரபுகளும், அரசியலமைப்பு சட்டங்களும் முறையாகப் பின்பற்றப்பட்டால் அதில் எனக்குப் பிரச்சனைகள் ஏதுமில்லை” என்றும் முகமட் அரிப் தெரிவித்திருந்தார்.